அவளது திருமுகத்தில் ஒளிரும்
சிறுநகைப்பின் பிரதி
ஒரு கனவின் நிட்சியாய்
என்னுள் தேங்கி கிடக்கிறது.
திரையிட்ட அவளது பேரழகு
வழிந்தோடி என் குவளையில்
நிறைந்து வழிகிறது.
அவள் சிறு விரல் தீண்டலில்
உயிர் பெறும் பொன் நிற வண்டுகள்
மொய்த்து கிடக்கின்றன என் தோட்டதில்
அவள் வாசம் விட்டு சென்ற பதிவை
கொண்டு அவளை தேடி அலைக்கிறேன்
சப்தமற்ற பெருவெளியில்
நின்று அவள் அழைக்கிறாள்.
No comments:
Post a Comment