Monday, October 4, 2010

முகமற்ற ஒலி

எங்கோ பெருவெளியில்
ஒலிக்கும் சிறு சப்தம்
என் அறையின் சிறு முனகலாய்,
என் காதுக்களுக்குள் கசிகிறது.
என் கரங்கள் நிளும் திசையில்
அவ் சப்தம் மவுனம் கொள்கிறது.
முகமற்ற ஒலியின்
முகவரி அறியா மனதின்
தேவையாய் அச் சிறு ஒலி மட்டுமே உள்ளது.

No comments:

Post a Comment